Archive for July 2012

செங்கல்பட்டு அருகே படாளம் பகுதி யில் அமைந்து உள்ளது கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி. இந்தக் கல்லூரியின் நிறுவனர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ரகுபதி. இப்போது இவர் தி.மு.க.வில் இருக்கிறார். அவரது மகன் அண்ணாமலை, இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர். இந்தக் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்ளவே... அரசியல் மற்றும் மாணவர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. 

திருவண்ணாமலை அருகே உள்ள வாழவச்சனூரைச் சேர்ந்த வைதீஸ்வரி, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இ.சி.இ. படித்து வந்தார். வழக்கம் போல வார விடுமுறைக்கு தனது வீட்டுக்கு வந்த வைதீஸ்வரி, 22-ம் தேதி ஞாயிறு இரவு மீண்டும் ஹாஸ்டலுக்குத் திரும்பினார். இவர்தான், அடுத்த நாள் இரவு 8.30 மணிக்கு ஹாஸ்டலில் உள்ள ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டார். உடனே சென்னை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட வைதீஸ்வரி, சிகிச்சை பலன் இன்றி 24-ம் தேதி இறந்துபோனார்.
சோகத்தில் இருந்த வைதீஸ்வரியின் தந்தை ராமசாமியிடம் பேசினோம். ''ஞாயிற்றுக் கிழமை மதியம் வீட்டில் இருந்து வைதீஸ்வரி ஹாஸ்டலுக்குக் கிளம்பிப் போச்சு. ஹாஸ்ட லுக்குப் போய்ச் சேரும்போது ராத்திரி ஆயிடுச்சு போல. மறுநாள், கூடப்படிக்கறவங்க முன்னாடிவெச்சு, லேட்டா வந்ததாச் சொல்லி வைதீஸ்வரியைத் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்காங்க. அதைத் தாங்க முடியாத வைதீஸ்வரி மாடியில இருந்து குதிச்சதா சொல்றாங்க. அவ்வளவு அசிங்கமாத் திட்டினவங்களுக்கு, எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா? இப்படி அநியாயமா என் பொண்ணைக் கொன்னுப்புட்டாங்களே...'' என்றார் கண்களில் நீர் கோர்க்க.

அவருடைய புகாரின் பேரில் வைதீஸ்வரியைத் திட்டிய பேராசிரியர்கள் கார்த்திகா மற்றும் ஜோஸ் மிராண்டா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர் படாளம் போலீஸார்.

கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசியபோது, ''வைதீஸ்வரி ஹாஸ்டலுக்கு வந்து சேர லேட்டாயி டுச்சுன்றது உண்மைதான். வெளியே யார்கூடவோ சுத்திட்டு வந்ததுதான் காரணம்னு மேடம் அவங் களாவே  முடிவு பண்ணிட்டாங்க. அடுத்த நாள் காலேஜ்ல எல்லா மாணவர்களையும் வைச்சுக்கிட்டு அசிங்க அசிங்கமாத் திட்டினாங்க. காது கூசும் அளவுக்குத் திட்டினதால்தான் வேதனை தாங்க முடியாம தற்கொலை செஞ்சுக்கிட்டா'' என்றனர்.
வைதீஸ்வரியின் தற்கொலை கல்லூரி மாணவர்களைக் கொதிக்கவைக்க... போராடும் சூழல் எழுந்தது. உடனே மாணவர்களை ஆடிட்டோரியம் வரவழைத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ''வைதீஸ்வரி இறப்புக்குக் காரணமான ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கை வைத்தனர் மாணவர்கள்.
அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ''மாணவர்களை கண்டிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஏதாவது தப்பு நடந்துவிட்டால் அவங்களைத்தானே கேட்பாங்க? நீங்க சொல்வது போலத் தகாத வார்த்தைகளால் பேசியது உண்மையாக இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் டி.எஸ்.பி. ஸ்ரீதேவி. ''சில ஆசிரியர்கள் பேசுறது சகிக்க முடியலை. 'அவுட்டிங் போறீயா? எவன்கூட போற? உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்கத் தெம்பில்லைன்னு எவனையாவது புடிச்சுக்கிட்டு வான்னு அனுப்பிட்டாங்களா?’னு கேட்கிறாங்க. ஒரு பொண்ணுகிட்ட இப்படியா எல்லா ஸ்டூடன்ட் முன்னாடியும் பேசுவாங்க?'' என்று கொதித்தனர் மாணவிகள். அதனால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து நிலைமையை சமாளித்து இருக்கிறார்கள்.

ஒரு சிலரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கல்வி நிறுவனம் தனது பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. நியாயமான நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுப்பதன் மூலமாக மட்டுமே இந்தக் களங்கம் துடைக்கப்படும். மாணவர்களைக் கையாள்வதில் ஆசிரியர்களுக்கு இன்னமும் நிறையப் பக்குவம் தேவை. அதைக் கற்றுக்கொடுப்பது யாரோ?

பா.ஜெயவேல்
படங்கள்:   முத்யாலாஸ்ரீ ஜெகன்நாத்

நன்றி: ஜூனியர்விகடன்


சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 77 வயது சோமசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டார். காரணம், மூன்று சிறுமிகளுக்கு ஆபாசப் படத்தை டி.வி-யில் போட்டுக் காட்டி, பிறகு பாலியல் பலாத்காரம் செய்தார் சோமசுந்தரம்.
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவனான பரத்ராஜ் செய்த சின்ன தவறுக்காக அந்த மாணவனை மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து சிறுநீரைக் குடிக்கச் சொல்லி சித்ரவதை செய்திருக்கிறார்கள்!

கோவை பள்ளி ஒன்றில் இரட்டைச் சடை போடாமல் பள்ளிக்குச் சென்ற ஐந்தாம் வகுப்புமாணவியின் தலைமுடியை வெட்டிவிட்டு, முட்டி போடச் சொன்னார் உடற்கல்வி ஆசிரியை.

தி.மு.க-வின் பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் கொத்தடிமையாக இருந்தவர் சிறுமி சத்யா. ஆறு மாதங்களுக்கு முன் பூப்பெய்திய சத்யா தொடர் வல்லுறவு காரணமாக எட்டு நாட்கள் சுய நினைவு இல்லாமல் இருந்து வலியும் வேதனையும் மிகுந்து இறந்திருக்கிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற சத்யாவின் உடலில் இருந்த விந்தணுக்களை அகற்றி காயங்களை மறைக்கச் சில மருத்துவர்கள் முயன்றிருக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் மட்டும் பத்திரிகைகளில் பதிவான குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் செய்திகள் இவை!

இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதம் குழந்தைகள்தான். அதாவது சுமார் 44 கோடி குழந்தைகள் இருக்கிறார் கள். குழந்தைகள் தினம் கொண்டாடும் தேசத்தில், இன்று மிக மோசமாக சிதைக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான்!

இந்தியாவில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளில் முக்கியமானவை... வகுப்பறை வன்முறை, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் வன்முறை, குழந்தைகளைக் கடத்திக் குற்றவாளிகளாக் கும் வன்முறை.


வகுப்பறை வன்முறைகள்
வலி உண்டாக்கக் கூடிய அல்லது காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் குழந் தைகளிடம் பேசுவதும் தண்டிப்பதும் வகுப்பறை வன்முறைதான். வகுப்பறைக்கு உள்ளேயோ, வெளியேயோ தனி நபராகவோ அல்லது சில பேர் இணைந்தோ உடல்,மன ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துவது தான் பல பள்ளிகளில் நடக்கிறது. ''கல்வி உரிமைச் சட்டப்படி வகுப்பறையில் எந்தக் குழந்தையையும் முட்டாள், மக்கு என்றெல்லாம் திட்டக் கூடாது. அப்பா, அம்மாவின் தொழில்குறித்து இழிவாகப் பேசக் கூடாது. சான்றிதழ்களில் மட்டுமே சாதி குறிப்பிடப்பட வேண்டும். வகுப்புஅறையில் எந்த மாணவனிடமும் 'நீ என்ன சாதி?’ என்று கேட்கக் கூடாது. பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்று எந்த மாணவனையும் அவமானப்படுத்தக் கூடாது. எட்டாம் வகுப்பு வரை ஒரு மாணவனை ஃபெயில் ஆக்கக் கூடாது என்றால், ஃபெயில் ஆகாத அளவுக்கு மாணவனைப் படிப்பில் முன்னேற்ற வேண்டும் என்று அர்த்தம்.           

அதைவிடுத்துக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல, ஓர் ஆசிரியரின் பொறுப்பு. ஆனால், நம் சமூகத்தில் உள்ள நிலைமை என்ன?

சமூகத்தில் நம்மில் பலர் நினைப்பதுபோல ஆசிரியர் பணி ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல. கிட்டத்தட்ட எதிர்காலச் சமூகத்தையே கட்டமைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. கிராமப்புறங்களில் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்குக் குழந்தைத் திருமணம் நடந்தால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும்கூட அந்த மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் உண்டு. இத்தனை பொறுப்புகளை அரசியல் சட்டமே கட்டாயமாக்கி இருக்கிறது. தன் கடமையில் இருந்து மீறுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது,  அத்துமீறுவது என ஆசிரியர் செயல்பட்டால் 17(ஆ) சட்டப்படி ஆசிரியரை சஸ்பெண்ட் அல்லது பணிநீக்கம் செய்யலாம். ஆனால், நிஜத்தில் நடப்பது என்ன? பல வன்முறை களை ஆசிரியர்கள்தான் நடத்துகின்றனர்'' என்கிறார் எழுத்தாளரும் கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராஜன்.

ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை மாவட்டக் கல்வி அதிகாரி, கூடுதல் கல்வி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களிடம் சொல்லலாம். மெட்ரிக் பள்ளி என்றால் மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் புகார் தெரிவிக்கலாம். இப்படி அளிக்கப்படும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 48 மணி நேரத்தில் விசாரணை செய்ய வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் வன்முறை
அரசு பல உத்தரவாதங்களைத் தந்தாலும் 66 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்தபாடில்லை. குழந்தை உழைப்பு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அவமானம் இல்லை; ஒரு நாட்டுக்கே அவமானம்.

''எந்தக் கொள்கையானாலும் திட்டமா னாலும் அதில் குழந்தைகளைக் கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்படுமானால் அவை அரைகுறையாக இருக்குமே தவிர, முழுமையானதாக இருக்காது. குழந்தைகள் எப்படித் தொழிலாளர்கள் ஆகிறார்கள்? 'ஸ்லம்லஸ் சென்னை’, 'விஷன் 2020’ என்று கவர்ச்சிகரமான திட்டங்களைச் சொல்லி மக்களை அப்புறப்படுத்தும்போது குழந்தை கள் படிப்பதை நிறுத்திவிட்டுத் தொழிலாளர் களாகின்றனர். நெல் விளையும் பூமியை பிளாட் போட்டு விற்பதால் சென்னை, திருப்பூர், பெங்களூரு எனத் திசையெங்கும் செல்பவர்கள் குழந்தைகளோடு அல்லல் படுகிறார்கள். பிழைப்புக்காகக் குழந்தை களும் வேலை செய்ய வேண்டிய கட்டா யம் ஏற்படுகிறது'' என்கிறார் குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார இயக்கத் தலைவர் தேவநேயன்.

''குழந்தைத் தொழிலாளர்களைத் தடைசெய்வதற்கான சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தாததால்தான் அனைத்துப் பணி இடங்களிலும் குழந்தைகளைக் கடுமையான பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தொழிலா ளர் துறை நடத்திய ஆய்வில் 1.07 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது. ஆனால், இதன் விளைவு என்ன? குழந்தைத் தொழிலாளர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கூலிரீதியாகவும் அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகிறார்கள்'' என்கிறார் தேவநேயன்.
பாலியல் வன்முறைகள்
இந்தியாவில் உள்ள ஐந்தில் மூன்று குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றன என்றால், நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், அதுதான் உண்மை.
''தனக்குப் பிரியமானவர் தன் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுவதையோ, தலையில் தட்டிக் கொடுப்பதையோ, மடியில் அமர்த்திக்கொண்டு கதை சொல்வதையோ எல்லாக் குழந்தைகளுமே விரும்புவார்கள். இந்த விருப்பத்தைத்தான் குழந்தைகளுக்குப் பிரியமானவர்களே அவர்களை வேட்டையாடப் பயன்படுத்திக்கொள்கின்றனர்'' என்கிறார் வாழ்வியல் பயிற்சியாளர் ஷெரின்.  

''பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனதின் ஆழத்தில் புதைத்து மறக்கவே முயல்வார்கள். அழிக்க முடியாத அருவ ருக்கத்தக்க கறை தங்கள் மீது படிந்து விட்டதாகவே அவர்கள் உணர்வார்கள். இதனால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று ஏகமாகப் பயப்படுவார்கள். அதேசமயம், தான் பாலியல் கொடுமைக்குஆளாக் கப்பட்டதை வெளியே சொன்னால், அதை மற்ற வர்கள் நம்புவார்களா என்ற குழப்பமும் அவர் களை அலைக்கழிக்கும். ஏனெனில், குழந்தை களுக்கு எப்போதுமே அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.

இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? குழந்தையின் முழு நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாக வேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்ப வேண்டும். நடந்தவற்றுக்கு குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். இவை போக, பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவை. குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே தற்காப்பு விவரங்களையும் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதையும் மனதில் பதியவைக்க வேண்டும். வன்மத்தோடு யார் நெருங்கினாலும் சத்தம் போடுவது,  கத்துவது, ஹேர்பின்னால் குத்துவது என்று தன் எதிர்ப்பைத் தைரியமாக வெளிப்படுத்தப் பழக்க வேண்டும்.  

இதில் கல்வி நிலையங்களுக்கும் பெரும் பொறுப்பு உண்டு. ஆனால், இப்போது எல்லாம் அந்த சரணாலயங்களிலேயே குழந்தைகள் வேட்டையாடப்படும் கொடூரத்தை எங்கு சென்று சொல்வது?'' என்கிறார் ஷெரின் காட்டமாக.
குழந்தைகள் கடத்தல், வன்முறைகள்
தனி மனித விரோதத்திலும், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பணத்துக்காகவும் குழந்தைகள் கடத்தப்படுவது அடுத்த அதிர்ச்சி. இதுகுறித்து வழக்கறிஞர் அஜிதா பேசுகிறார்: ''ஆயுத வியாபாரம், போதைப்பொருள் கடத்தல், குழந்தைக் கடத்தல்  என்ற மூன்று குற்றங்களும் உலக அளவிலான பெரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்தியா, பர்மா, வங்க தேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகின்றனர். இப்படிக் கடத்தப்படும் குழந்தைகளைச் சூதாட வைத்தல், பிச்சை எடுக்கவைத்தல், பாலியல் தொழிலுக்கு உட்படுத்தல் என்று பல்வேறு குற்றங்கள் செய்து வியாபாரப் பொருளாக்கிவிடுகின் றனர். வசதியானவர்களின் பிள்ளை களைவிட அதிகம் கேள்வி கேட்காத, வறுமை நிலையில் உள்ள குழந்தை களே கடத்தப்படுகின்றனர். கல்வி யிலும் பொருளாதார நிலையிலும் மாற்றம் உண்டாவது மட்டுமே இந் நிலையில் மாற்றத்தை உண்டாக்கும். 18 வயதுக்கு உட்பட்ட 63 சதவிகிதக் குழந்தைகளுக்குத் திருமணம் நடப்பதால் சிறு வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது, அடிப்பது, மிதிப்பது என்று 53 சதவிகிதம் குடும்ப வன்முறைகள் நடக்கின்றன.

தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த முழுமையான சட்டம் நடைமுறையில் இல்லை. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புச் சட்டம் நகல் வடிவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது முழு வடிவம் பெற்றால் குழந்தைகள் மீது வன்முறை நிகழ்த்துபவர்களுக் குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். தற்போது பாலியல் வன்முறை செய்யும் நபருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்யும் நபருக்கு மரணதண்டனை வரைக்கும் தண்டனைகள் தரப்படுகின்றன. ஆனால், இதில் பல சட்டச் சிக்கல்கள் இருப் பதால் பல குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துக்கொள்கின்றனர். எனவே, 'என் நாட்டில் வாழும் எந்த ஒரு குழந்தையும் எந்த விதத்திலும் பாதிக் கப்படாது’ என்பதை அரசியல் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் சட்டங்கள் முழுமையாக வேலை செய்யும்!'' என்கிறார் அஜிதா தீர்க்கமாக.
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் சாரதா சீனிவாசன் குழந்தைகளுக்குத் தர வேண்டிய பயிற்சிகள் குறித்துப் பேசுகிறார்:

''குழந்தைகள் தங்களுக்கு என்ன நடந்தாலும் அதைத் தாயிடமோ, தந்தையிடமோ வெளிப்படையாகச் சொல்லும் சூழல் வீட்டில் வேண்டும். தொடக்கப் பள்ளிகளிலேயே உடல் அங்கங்கள்குறித்த தெளிவை ஏற் படுத்த வேண்டும். உடலமைப்பை வரைந்து காட்டி அந்த இடங்களில் யாராவது தவறாகத் தொட்டால் உதவி என்று கத்தச் சொல்லலாம். அந்த இடத்தைவிட்டு ஓடிவரச் சொல்லிக் கொடுக்கலாம்.  
நீச்சல் குளத்துக்குக் குழந்தைகள் சென்றால் அதிக கவனம் செலுத்த வேண்டும். கோச், டிரைவர் உள்ளிட்ட அத்தனை பேரும் எப்படிப் பழகுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குழந்தையுடன் பெற்றோர் அவசியம் சென்று வர வேண்டும்.

காரில் டிரைவரை நம்பி குழந்தையை அனுப்பக் கூடாது. அம்மாவோ, அப்பாவோ குழந்தையைப் பள்ளியில் விட்டு வர வேண்டும். ஆட்டோ, வேனில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புபவர்கள் டிரைவருடைய செல்போன் எண், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

பள்ளியிலோ, வெளியிலோ குழந்தைகளைக் குழுவாகச் செல்ல அறிவுறுத்த வேண்டும். தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது'' என்கிறார்:
இவை எல்லாம் எங்கோ தூர தேசத்தில், முகம் அறியாக் குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைகள் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு அருகில்... ஏன் உங்கள் வீட்டிலேயே இருக்கும் குழந்தையும் இந்தக் கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். இப்படியான சூழ்நிலைகளைக் குழந்தைகளுக்குப் புரியவைத்து, அவர்களை அதை எதிர்கொள்ளப் பழக்குவது பெற்றோரின் மிக முக்கியமான கடமை. ஏனெனில், பெரும்பாலான குற்றங்களில் சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் குழந்தைகளின் மிக நெருங்கிய உறவினர்தான். எனவே, குழந்தைகள் வன்முறை குறித்த விழிப்பு உணர்வு பெற்றோர்களுக்குத்தான் இப்போதைய அதிஅவசியத் தேவை!


-க.நாகப்பன்
ஓவியங்கள் : பாலமுருகன்

நன்றி: ஆனந்த விகடன்.1.08.10



வா
ழ்வை மேம்படுத்த உதவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆக்கபூர்வமாக அன்றி அழிவுப்பாதைக்குப் பயன் படுத்தி​னால் என்னவாகும் என்பதற்கு மறுபடி ஓர் உதாரணம். இந்தமுறை பரிதாப இலக்கு ஒரு மாணவி! 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தென்னம்பட்டி கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள் ஒன்பது வயதான பார்வதி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அதே ஊரில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறான் ரவி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). .  கடந்த 21-ம் தேதி, பார்வதியை பலாத்காரம் செய்ததாக ரவி கைது செய்யப்பட... அதிர்ந்து நிற்கிறது திண்டுக்கல் வட்டாரம்!

மருத்துவப் பரிசோதனைக்காக வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மலங்க, மலங்க விழித்தபடி காத்திருந்த சிறுமி பார்வதியிடம் பேசினோம்.

''அண்ணே... நான் நாலாப்பு படிக்கிறேன். அன்னிக்கி ஆய் உக்கார்றதுக்காக அந்தப் பக்கமா போனேன். அப்ப அந்த அண்ணா வந்துச்சு. ' உன்னை கூப்புட்டு வரச்சொன்னாங்க’ன்னு கூப்புட்டுச்சு. நான் வர மாட்டேன்னுட்டேன். உடனே, என்னை அடிச்சு இழுத்துட்டுப் போச்சு. நான் அழுதுகிட்டே சத்தம் போட்டேன்.. உடனே அந்த அண்ணன் கர்ச்சீப்பை எடுத்து என் வாயில் வெச்சு அமுக்கிடுச்சு. 'நான் சொல்றபடி கேக்கலைன்னா கொன்னுடுவேன்'னு கழுத்தைப் பிடிச்சு அமுக்கிச்சு. அப்புறம் என் துணிகளை...'' (அதற்கு மேல் சொல்வதற்கு அந்தக் குழந்தைக்கும் தெளிவில்லை... கேட்க நமக்கும் தெம்பில்லை) என்றபடி அழத் தொடங்கினாள் பார்வதி.
அந்தச் சிறுமியே  தொடர்ந்தாள்.

''கர்ச்சீப் கீழே விழுந்ததும் நான் கத்துனதைக் கேட்டு விறகு வெட்ட வந்தவங்க ஓடி வந்தாங்க. உடனேஅந்த அண்ணா டவுசரை தலையில மாட்டிக்கிட்டு ஓடிடுச்சு. நான் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னேன்'' என்றபடியே நினைவுகள் தந்த நடுக்கத்தோடு தன் தாயாரை அணைத்துக் கொண்டாள்.
சிறுமியின் தாய் ஈஸ்வரி, ''நாங்க அன்னாடு கூலிக்குப் போனாதாங்க கஞ்சி. எங்களுக்கு ரெண்டு பொட்டப் புள்ளைங்க. இவதான் மூத்தவ. டவுனுபள்ளிக்கூடத்துல படிக்க வெக்க வசதியில்லாம உள்ளூர்ல படிக்க வெச்சோம். நாலாப்பு படிக்கிற பிள்ளையை இப்படி செஞ்சிப் புட்டானே... இவ தலையெழுத்து... எந்த தப்பும் பண்ணாம இந்த வயசுலயே போலீஸ், கோர்ட்னு அலைஞ்சு இன்னும் அவமானப்பட வேண்டியதாப் போச்சு'' என்றபடி தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கீதா, ''இந்த பிரச்னைக்குக் காரணமான அந்தப் பையன் இப்ப சீர்திருத்தப் பள்ளிக்குப் போயிட்டான். இதுக்கெல்லாம் காரணமே செல்போன்தான். அந்த ஊர்ல இருக்குற சில பசங்களோட செல்போன்ல ஆபாசப் படங்களை பார்ப்பானாம். அன்னிக்கும் அப்படி ஒரு படத்தைப் பாத்துட்டு இருந்தப்பதான், இந்தப் பிள்ளையைப் பார்த்திருக்கான். உணர்ச்சி வேகத்தில் இப்படிக் கேவலமா நடந்துக்கிட்டான். விசாரணை செய்றப்ப இதைத்தான் சொல்லிச் சொல்லி அழறான். 'இனிமே அசிங்கமான படத்தைப் பாக்க மாட்டேன். இப்படி நடந்துக்க மாட்டேன்'னு கதறி குமிச்சான். அவனைப் பெத்தவங்களும் தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிக்கட்டும்னு கோபத்தில் போயிட்டாங்க. எத்தனை பேருக்கு எவ்வளவு அவமானம், வேதனை பாருங்க'' என்றார்.

அறியாத வயதிலேயே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடத் தூண்டுவது குறித்து மனநல மருத்துவர் அன்னராஜிடம் கேட்டோம். ''இன்டர்நெட்டில்  கொட்டிக்கிடக்கும் குப்பைகள்தான் முக்கியக் காரணம். அவற்றையும் மொபைல் போன்கள் மூலம் பரிமாறிக் கொள்ளும் அசிங்கங்களையும் பார்க்கும்போது, வயது வித்தியாசம் இல்லாமல் வக்கிர எண்ணங்கள் தூண்டப்படுவது இயற்கைதான்.  
வயதில், வலிமையில் குறைந்த பெண்ணாக இருப்பதால் வெளியே சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் இந்தத் தவறை செய்து இருக்கிறான் அந்தப் பையன். அந்தப் பெண் குழந்தைக்கு உடனடியாக உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கா விட்டால் வாழ்க்கை முழுவதும் கூட இந்தப் பாதிப்பு மனதைவிட்டு அகலாது.

அந்தப் பையனுக்கும் உளவியல் சிகிச்சை அவசியம். இல்லா விட்டால் எதிர்காலத்தில் குற்ற உணர்வும், சீர்திருத்தப் பள்ளியின் சூழலும் அவனை மிகப்பெரிய குற்றவாளியாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டு. பொதுவாகவே செல்போன், இன்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்தும் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டும். பள்ளிகளிலும் உளவியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், கட்டவிழ்ந்து கிடக்கும் அறிவியல் வளர்ச்சியால் இளம் சமுதாயத்துக்கு கெடுதலே அதிகம் மிஞ்சும்'' என்றார்.
வரங்களே சாபங்களாக மாறாதிருக்க, கூடுதல் கவனம் தேவைதானே!

- ஆர்.குமரேசன்
படங்கள்: வி.சிவக்குமார்


நன்றி: ஜூனியர் விகடன். 29 ஜூலை 2012


இந்த பிரச்சனையை பற்றி  நாங்கள் எதையும் எழுத போவதில்லை... இதை பாருங்கள் வலிகள் நிறைந்த வேதனை உங்களுக்கு தெரியும்.. உங்கள் வீட்டில் யாராவது ரகசியமாக போன் பேசுகிறார்களா......... உடனே கவனியுங்கள்...

சரி: வீடியோ, பத்திரிக்கை செய்திகளை பாருங்கள்..


   
நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி



நன்றி: விஜய் டிவி நடந்தது என்ன 



 நன்றி: நக்கீரன்



நன்றி: மீடியா வாய்ஸ்



உங்கள் வீட்டில் யாராவது யாருக்கும் தெரியாமல் போனில் திருட்டுதனமாக பேசுகிறார்களா?... இல்லை அவர்களின் நடவடிக்கைகளில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? இந்த கட்டுரையை தவறாமல் படிங்க:

ஒரு வருடத்திற்கு முன்னால் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த 17 வயது அனுவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

தன்னுடைய போனுக்கு வந்த  ராங்க் காலை நீங்க யாருங்க என பேச்சி விட்டு ராங்க் கால் என சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டார். அதற்கு அடுத்த நாளும் அந்த கால் இவர் துண்டித்து விடுகிறார்.. ஒரு கட்டத்தில் எதிர் முனையில் பேசிய நபர் நைசாக பேசி… அந்த பெண்ணை காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். காதல் கண்ணை மறக்கும் என்பதுபோல் பெற்றவர்களின் கண்ணீரை மறைந்து விட்டு ராஜுடன் போனில் பேசினார்.

ஒரு கட்டத்தில் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்ட அனு, வீட்டில் இருப்பது கஸ்டமாக இருக்கிறது நீ வந்து என்னை பொண்ணு கேளு என சொல்ல, எங்க வீட்டில் ஒரே கொஞ்சம் பிரச்சனையா இருக்கு, வேணா நீ வந்துடு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காப்பாத்துறேன் என்னை நம்பி வா என அழைக்க, காதலன் பேச்சில் மயங்கிய அனு வீட்டை விட்டு வந்து விடுகிறார்…..
  1. ·         காதலியாக இருந்து விபச்சாரியாக மாற்றப்பட்ட  அனு அனுபவித்த கொடுமை……..
  2. ·     இப்படியே பல பெண்களை சீரழித்த 9 பேரை கைது செய்ததன் பின்னனியில் வெளிச்சம் ….
  3. ·         செல்போனால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை காப்பாற்ற என்ன செய்ய போகிறோம்


தொடர்ந்து பார்க்க: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான பதிவை..


நன்றி; புதிய தலைமுறை மற்றும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நடந்தது என்ன குழுவினருக்கும்

                                                    -வெளிச்சம் நந்தினி